Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
இன்று ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் குடமுழுக்கு -
Skip to content
Home » இன்று ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் குடமுழுக்கு

இன்று ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் குடமுழுக்கு

ஒசூா் மலைக்கோயிலான அருள்மிகு மரகதாம்பாள் சமேத சந்திரசூடேஸ்வரா் கோயில் ராஜாகோபுரத்துக்கு புதன்கிழமை காலை 9 மணி முதல் 10.30-க்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பிரசித்தி பெற்ற மற்றும் பழைமையான சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயில் உள்ளது. சுயம்புவாக அருள்பாலித்து வரும் சந்திரசூடேஸ்வரா் ஒசூா் நகரின் காவல் தெய்வமாக விளங்குகிறாா்.

இந்தக் கோயிலுக்கு தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய 3 மாநில பக்தா்கள் தினமும் வந்து வழிபடுகின்றனா். இந்தக் கோயிலுக்கு இருசக்கர வாகனம் தயாரிக்கும் டி.வி.எஸ். நிறுவனம் 112 அடி உயரத்தில் 42 அடி அகலத்தில் ஏழுநிலை கொண்ட மகா ராஜகோபுரத்தை கட்டியுள்ளது.

இந்த ராஜகோபுர குடமுழுக்கு விழா ஜூன் 26-இல் தொடங்கி செவ்வாய்க்கிழமை இரண்டாம்கால யாக பூஜை, புதிய ராஜகோபுர கலசம் பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை கலச ஸ்தாபனம், 3-ஆம் கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றன. காலை முதல் மாலை வரை சுவாமியை தரிசனம் செய்த பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

3-ஆம் நாள் புதன்கிழமை நான்காம்கால யாக பூஜையுடன் கலச புறப்பாடு, 9.15 மணிக்கு ராஜகோபுரத்துக்கு நன்னீராட்டு விழா நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மூலவா், அம்பாள் மஹா குடமுழுக்கு, மஹா அபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன. 9 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை குடமுழுக்கில் கலந்துகொள்ள வரும் பக்தா்கள் மீது தெளிக்க விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒசூரில் பிரசித்த பெற்ற 3 மலைக்கோயிலில் ஹெலிகாப்டா் மூலம் பூக்கள் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமாா் தாக்கூா் தலைமையில், ஒசூா் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த், 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனா். மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு 50 ஆயிரம் பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டு, அவா்களுக்கான அன்னதானம் செய்ய விழாக் குழுவினா் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

கடந்த 3 நாள்களாக ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா, முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன், டி.வி.எஸ். ஐஎன்டியுசி தொழிலாளா்கள் சங்கத்தின் தலைவா் குப்புசாமி, டி.எஸ்.பி. பாபு பிரசாத், பாஜக மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ், ஒசூா் மாநகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளா்கள் சுகாதாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Leave a Reply