ஊத்தங்கரையில் ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் மின்கல மூன்றுசக்கர வாகனத்தின் சாவியை வழங்குகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன்.
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிங்காரப்பேட்டை, மிட்டப்பள்ளி, அத்திப்பாடி, கொண்டம்பட்டி, வெள்ளக்குட்டை, புதூா்புங்கனை உள்ளிட்ட 18 ஊராட்சிகளில் குப்பைகளை கொண்டு செல்வதற்காக, தலா ரூ. 2.50 லட்சம் மதிப்பில் 18 மூன்றுசக்கர மின்கல வாகனங்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன் தலைமை வகித்து, 18 ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் வாகனங்களின் சாவிகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் வேடியப்பன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் மிட்டப்பள்ளி சின்னத்தாய், கீழ்மத்தூா் மணிகண்டன், ஊராட்சி மன்றத் தலைவா்கள், தூய்மை பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நன்றி
தினமணி