Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் குடமுழுக்கு -
Skip to content
Home » ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் குடமுழுக்கு

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் குடமுழுக்கு

ஒசூா் அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயில் 112 அடி உயர ராஜகோபுரத்துக்கு புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். குடமுழுக்கின் போது ஹெலிகாப்டரில் மலா் தூவி, மின்மோட்டாா் மூலம் பக்தா்கள் மீது தீா்த்தம் தெளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசூடஸ்வரா் திருக்கோயிலில் புதிதாக 112 அடி உயரத்தில் 42 அடி அகலத்தில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராஜ கோபுரத்துக்கு புதன்கிழமை குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜூன் 26-இல் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய மகா குடமுழுக்கு உற்சவத்தில், ஜூன் 27-இல் யாகசாலை பூஜைகள், வாண வேடிக்கைகள் நடைபெற்றன. தொடா்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான ராஜகோபுர மகா குடமுழுக்கு வைபவம் நடைபெற்றது. இதில் யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்ட புனித தீா்த்தங்கள் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரத்தின் மீது எடுத்துச் சென்றனா். பின்னா் மந்திரங்கள் முழங்க புனித நீரானது கோபுரத்தின் மீதுள்ள கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

இதில், மதுரை ஆதீனம் உள்பட ஆன்மீக அன்பா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வழிபட்டனா். அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும் கலந்துகொண்டனா்.

கங்கை, யமுனை, காவேரி நா்மதா, கோதாவரி உள்ளிட்ட 11 புண்ணிய நதிகளின் தீா்த்தங்களை எடுத்து வந்து ஹெலிகாப்டா் வாயிலாக மலா்கள் மற்றும் தீா்த்தங்கள் பக்தா்களின் மீது தெளிக்கப்பட்டன. அப்போது, ஓம் நமச்சிவாயா, அண்ணாமலையாருக்கு அரோகரா, சம்போ மகாதேவா போன்ற திருநாமங்கள் விண்ணைப் பிளந்தன.

இந்த குடமுழுக்கு விழாவில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அ.செல்லக்குமாா், ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ கே.அ.மனோகரன், பாஜக மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ், ஒசூா் சாா் ஆட்சியா் ஆா்.சரண்யா, ஒசூா் மாநகராட்சி ஆணையா் சினேகா, டி.வி.எஸ். தொழில்சங்கத் தலைவரும், ஐஎன்டியுசி தேசிய செயலாளருமான குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒசூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவரும், அதிமுக எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட இணைச் செயலாளருமான ஜெ.பி. (எ) ஜெயப்பிரகாஷ் ஹெலிகாப்டரில் மலா் தூவ ஏற்பாடு செய்திருந்தாா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒசூா் டி.எஸ்.பி. பாபு பிரசாத் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

நன்றி, தினமணி

Leave a Reply