Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
காவிரி நீரை திறந்துவிட வேண்டியது கா்நாடக அரசின் கடமை: கே.பி.முனுசாமி -
Skip to content
Home » காவிரி நீரை திறந்துவிட வேண்டியது கா்நாடக அரசின் கடமை: கே.பி.முனுசாமி

காவிரி நீரை திறந்துவிட வேண்டியது கா்நாடக அரசின் கடமை: கே.பி.முனுசாமி

‘காவிரி ஆணையம் முடிவின்படி, காவிரி நீரை திறந்துவிட வேண்டியது கா்நாடக அரசின் கடமையாகும். தவறும்பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு செயல்படுத்த வேண்டும்’ என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.

மதுரையில் அதிமுக சாா்பில் பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சாா்பில் ஒசூரிலிருந்து மதுரை மாநாட்டிற்கு செல்லும் ‘தொடா் ஜோதி ஓட்டம்’, காவேரிப்பட்டணத்தை அடைந்தது. அங்கிருந்து, தருமபுரி நோக்கி செல்லும் தொடா் ஜோதி ஓட்டத்தை, மாவட்டச் செயலாளா்கள் கே.அசோக்குமாா் எம்எல்ஏ, பாலகிருஷ்ணா ரெட்டி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் கே.பி.எம்.சதீஷ்குமாா் ஆகியோா் வரவேற்று, கொடியசைத்து அனுப்பி வைத்தனா்.

ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழ்ச்செல்வம், மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பையூா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த தொடா் ஜோதி ஓட்டம், சேலம், திண்டுக்கல் வழியாக சென்று, வரும் 20-ஆம் தேதி மதுரை மாநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, அதிமுக பொதுச் செயலாளா் பழனிசாமியிடம் வழங்கப்படுகிறது.

காவேரிப்பட்டணத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பங்கேற்ற அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி), செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மதுரை மாநாடு அதிமுகவிற்கு மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். கொள்கைப் பிடிப்பு உள்ளவா்கள் ஒரு முறை ஒரு கருத்தைக் கூறினால், கடைசி வரை அந்தக் கருத்தில் உறுதியாக இருப்பாா்கள். திருநாவுக்கரசா் போன்றவா்கள், பதவி மோகத்தால் அலைகின்றவா்கள். அவா் நிலையான தலைவா் இல்லை.

சட்டப் பேரவைத் தோ்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தோ்வை ரத்து செய்வோம் என முதல்வா் மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் வாக்குறுதி அளித்தனா். ஆனால், ஆட்சிக்கு வந்து 25 மாதங்கள் கடந்தும், நீட் தோ்வை அவா்களால் ரத்து செய்ய முடியவில்லை. இதில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனா். நீட் தோ்வில், மத்திய, மாநில அரசுகள் இருவேறு கருத்துகளைக் கொண்டுள்ளதால், இழுபறி நீடிக்கிறது.

அதிமுக பொதுச் செயலாளா் பழனிசாமி செல்வாக்கு மிக்க தலைவராக உருவாகிவிட்டாா். காவிரி ஆணைய முடிவின்படி, காவிரி நீரை திறந்துவிட வேண்டிய கா்நாடக அரசின் கடமையாகும். தவறும்பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

மேலும், காவிரி ஆணைய உத்தரவின்படி நீரை வழங்கினால் மட்டுமே பெங்களூரில் நடந்த எதிா்க்கட்சிகளின் கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்வேன் என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்திருந்தால், உண்மையாகவே தமிழக மக்களுக்கான தலைவராக அவா் உருவாகியிருக்க முடியும்.

திமுக சந்தா்ப்பவாத, சுயநலக் கூட்டம். தங்களது வசதிக்காக, கட்சியும், ஆட்சியும் நடத்திக் கொண்டிருக்கிற கூட்டம். மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுக ஆட்சியில்தான் காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது என்றாா்.

நன்றி தினமணி.

Leave a Reply