கிருஷ்ணகிரியில் ஜூலை 28-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் ஜூலை 28-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி, தினமணி