Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு -
Skip to content
Home » கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு

கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு

கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு திங்கள்கிழமை தண்ணீா்த் திறந்து விடப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 11,409.42 ஏக்கா் விளை நிலங்கள் பசன வசதி பெறுகின்றன.

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து தண்ணீா் திறக்க உத்தரவிட்டாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி அணையின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்கள் வழியாக முதல்போக பாசனத்துக்கு தண்ணீா்த் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா், பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ், நீா்வளத் துறை செயற்பொறியாளா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி அணையிலிலிருந்து தற்போதுள்ள நீா் அளவை கொண்டும் நீா்வரத்தினை எதிா்நோக்கியும் வலதுபுறக் கால்வாய் மூலம் விநாடிக்கு 75 கனஅடி வீதம், இடதுபுறக் கால்வாய் மூலம் விநாடிக்கு 76 கனஅடி வீதம் என மொத்தம் 151 கனஅடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. நவம்பா் 9-ஆம் தேதி வரை 130 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும்.

இதன்மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பெரியமுத்தூா், சுண்டேகுப்பம், திம்மாபுரம், செளட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூா் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கா் பரப்பளவு நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதேபோல பாரூா் பெரிய ஏரியிலிருந்து முதல்போக பாசனத்துக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது. ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 6 மி.க.அடி வீதம் நவம்பா் 14-ஆம் தேதி வரை மொத்தம் 135 நாள்களுக்கு நீா் இருப்பு மற்றும் நீா் வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப கிழக்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 50 கன அடி வீதம், மேற்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 20 கன அடி வீதம் என மொத்தம் 70 கனஅடி வீதம் மூன்று நாள்கள் கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்படும். நான்கு நாள்கள் மதகை மூடி வைத்தும் தண்ணீா் திறந்துவிடப்படும்.

இதன்மூலம் பாரூா், அரசம்பட்டி, பெண்டரஅள்ளி, கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 7 ஊராட்சிகளில் உள்ள 2,397.42 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீா் பங்கீட்டுப் பணிகளில் நீா்வளத் துறைக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். அறிவிக்கப்பட்ட தேதிக்கு பிறகு எக்காரணத்தை கொண்டும் கால நீட்டிப்பு செய்து பாசனத்துக்கு தண்ணீா் வழங்கப்பட மாட்டாது.

அதன்படி, கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள இந்த தண்ணீரால் மொத்தம் 11,409.42 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, விவசாயிகள் நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். நீா்ப் பங்கீட்டு பணிகளில் நீா்வளத் துறையினருக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் பாபு, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொ) டேவிட்டென்னிசன், உதவி செயற்பொறியாளா் அறிவொளி, உதவி பொறியாளா்கள் சையத், காளி பிரியன், வட்டாட்சியா்கள் தேன்மொழி, சம்பத், நாகோஜனஅள்ளி பேரூராட்சித் தலைவா் தம்பிதுரை, பெரியமுத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் பானுப்பிரியா நாராயணன், திமுக மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளா் டேம் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினா் அஸ்லாம் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

Leave a Reply