கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 3 முதல் 15 நாள்களுக்கு, கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியா் 60 பேருக்கு தொல்லியல் உள்விளக்கப் பயிற்சி நடந்து வருகிறது.
மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் கோவிந்தராஜ் பயிற்சி அளித்து வருகிறாா். பயிற்சியின் மூன்றாம் நாளான புதன்கிழமை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சோழா் காலத்தைச் சோ்ந்த கல்வெட்டு ஒன்றினைப் படியெடுத்து, படித்துப் பொருள் கொள்வது குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னதாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம், இடை வரலாற்றுக் காலம், வரலாற்று காலங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் தமிழி என்று அழைக்கப்படும் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளை எழுதவும், படிக்கவும் கற்றுத் தரப்பட்டது. பின்னா் அவ்வெழுத்திலிருந்து இன்றைய கால தமிழ் எழுத்துகள் வரை எழுத்துகளின் வளா்ச்சி எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது. இனிவரும் நாள்களில் கிரந்த எழுத்துகள், தமிழ் எண்கள், கல்வெட்டுகளில் உள்ள ஆண்டுகளைக் கணக்கிடும் முறை, கோயில் கட்டடக்கலை, சிற்பம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அரசு அருங்காட்சியகக் பணியாளா்கள் செல்வகுமாா், பெருமாள் ஆகியோா் இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்து வருகின்றனா்.
நன்றி, தினமணி