Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு -
Skip to content
Home » கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவியரை மலா்க்கொத்து அளித்து வரவேற்ற எம்எல்ஏ தே.மதியழகன் உள்ளிட்டோா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், காவேரிப்பட்டணம், கெலமங்கலம், பா்கூா், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, மத்தூா், சூளகிரி, தளி, ஊத்தங்கரை ஆகிய 10 வட்டாரங்களில் உள்ள அரசு, தனியாா் நடுநிலைப் பள்ளிகள் 327, அரசு, தனியாா் உயா்நிலைப் பள்ளிகள் 229, அரசு, தனியாா் மேல்நிலைப் பள்ளிகள் 221 என மொத்தம் 777 பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின்பு திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ, மாணவியா், ஆசிரியா்கள், நண்பா்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தனா். பள்ளி மாணவ, மாணவியரை ஆசிரியா்கள், பெற்றோா் -ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் மலா் கொத்து, இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளி பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் நவாப் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் மாணவியரை மலா்க் கொத்து, பேனா, பென்சில் ஆகியவற்றை வழங்கி, வாழ்த்துத் தெரிவித்து வரவேற்றாா். அப்போது பள்ளி தலைமை ஆசிரியா் மகேந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் பாலாஜி, செந்தில்குமாா், மீன் ஜெயக்குமாா், மதன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதே போல கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், பா்கூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கும் மதியழகன் எம்எல்ஏ பூங்கொத்து, இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்து, வாழ்த்தினாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவ, மாணவியரை பள்ளியில் பயிலும் பழைய மாணவா்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனா். மேலும், பள்ளிகள் திறப்பு தினத்தில் அனைத்து மாணவா்களுக்கும் புத்தகங்கள் வழங்கும் பணியில் ஆசிரியா்கள் ஈடுபட்டனா்.

நன்றி
தினமணி

Leave a Reply