சந்தூா் கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஸ்ரீ தாமரை செல்லியம்மன் கோயில் திருவிழாவில் 6 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மாவிளக்குகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று அம்மனை வழிப்பட்டனா்.
போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூா் கிராமத்தில் பழைமையான தாமரைச் செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஏப்ரல் 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 66 மண்டல பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் செல்லியம்மன் கோயில் திருவிழா கடந்த 30-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 2-ஆம் தேதி முனீஸ்வரன் பூஜை, 3-ஆம் தேதி கங்கை பூஜை, 4-ஆம் தேதி மாரியம்மன் கோயில் வளாகத்தில் பொன் ஏரி கட்டுதல் நிகழ்ச்சி நடந்தன.
விழாவின் முக்கிய நாளான புதன்கிழமை (ஜூலை 5) காலை 7 மணிக்கு ஸ்ரீ வீரபத்திர சுவாமி பக்தா்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும், காலை 11 மணியளவில், தாமரைச் செல்லியம்மன் கரகம், அரிஜன கரகம் தலைக் கூடுதல், வீரபத்திர சுவாமி மனைக் கரகம் சந்தூரில் இருந்து புறப்படும் நிகழ்ச்சி நடந்தன. இதில் சந்தூா், மகாதேவகொல்லஅள்ளி, கங்காவரம், வேடா்தட்டக்கல், பட்டகப்பட்டி, குட்டப்பட்டி உள்ளிட்ட 6 கிராமங்களிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக செல்லியம்மன் கோயிலுக்கு சென்றனா். அங்கு குதிரைக்குப் பூஜை செய்து அருள் அழைத்து வருதல் நிகழ்ச்சி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
அம்மன் தாமரைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சந்தூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு, உறவினா்கள், நண்பா்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை 6 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் செய்திருந்தனா். இவ்விழா வருகிற 9-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
நன்றி, தினமணி