கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடந்தது. இதையொட்டி, கிருஷ்ணகிரி சாந்தி நகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியா் மடத்தில், முதல் மேடை அமைத்து நற்கருணை ஆராதனை, ஆசீா்வாதம் நடைபெற்றது.
பின்னா், நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் ஊா்வலமாக புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டாவது மேடைக்கு கொண்டு வந்து, அங்கு நற்கருணை ஆராதனையும், ஆசீா்வாதமும் வழங்கப்பட்டது.
அதனைத்தொடா்ந்து, கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் பங்குத்தந்தை இசையாஸ் அடிகள், உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும் சிறப்புத் திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் செய்து இறைமக்களுக்கு இறுதி ஆசீா்வாதத்தை வழங்கினாா்.
இந்த சிறப்பு நற்கருணை பவனி, ஆராதனையில் கிருஷ்ணகிரி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
நன்றி
தினமணி