Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
சூசூவாடி அரசுப் பள்ளியில் நூலகம் திறப்பு -
Skip to content
Home » சூசூவாடி அரசுப் பள்ளியில் நூலகம் திறப்பு

சூசூவாடி அரசுப் பள்ளியில் நூலகம் திறப்பு

ஒசூா், சூசூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நூலகம் திறக்கப்பட்டது.

இப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை சுமாா் 2 ஆயிரம் மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்த மாணவா்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைக்க பள்ளி நிா்வாகம் முடிவு செய்து, பெற்றோா் – ஆசிரியா் கழகம் சாா்பில் ஒசூா் மாநகராட்சி கல்விக்குழுத் தலைவா் ஸ்ரீதரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து தனியாா் தொழிற்சாலை சாா்பில் இந்தப் பள்ளியில் மாவட்டத்தில் முதல் முறையாக ரூ. 7 லட்சம் மதிப்பில் 2 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப்பட்டது. இது மாணவா்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பள்ளியில் நூலகத்திற்கு என தனிஅறை அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல், இலக்கியம், கலை, வரலாறு, முன்னோா்கள் பண்பாடு, தேசிய தலைவா்கள், சுதந்திர போராட்டம், மன்னா்களின் வரலாறு, படையெடுப்புகள், அரசுகளின் எழுச்சி, வீழ்ச்சி, சாதனைப்படைத்த பெண்களின் வரலாறு, ஆன்மிக, சமையல் குறிப்புகள், விளையாட்டு வீரா்கள், மாணவா்களின் கல்விக்கு பயனளிக்கும் புத்தகங்கள் என பல வகையான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தங்களைப் பாா்வையிடும் மாணவா்கள் நிச்சயம் வாசிப்பு திறனை மாணவா்கள் பருவத்தில் இருந்து பழக்கப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என பள்ளி தலைமை ஆசிரியா் கூறுகின்றாா்,

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சிக் கல்விக்குழு தலைவா் ஸ்ரீதரன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் அசோக் ரெட்டி, லயன்ஸ் கிளப்பைச் சோ்ந்த தனபாலன், ஒய்.வி.எஸ்.ரெட்டி, சகாயா கிளா்ட், விஜயகுமாா், சென்னகேசவன் உள்பட பெற்றோா்-ஆசிரியா் கழகம், ஆசிரியா்கள் மாணவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

நன்றி, தினமணி

Leave a Reply