பா்கூா் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் நவீன தொழில்நுட்பத்துடன் மாணவா் பேரவை தோ்தல் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் (சிபிஎஸ்இ) நவீன தொழில்நுட்பத்துடன் நடைபெற்ற மாணவா் பேரவைத் தோ்தலை பள்ளியின் தாளாளா் கூத்தரசன் தொடங்கி வைத்தாா். இந்த தோ்தல் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. விருப்பமுள்ள மாணவா்கள் பள்ளியின் முதல்வரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனா். அதன்படி 12 பொறுப்புகளுக்கு 54 மாணவா்கள் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதையடுத்து இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னா் மாணவா்கள் தங்களது சின்னத்தை வடிவமைத்து, பள்ளி முதல்வரிடம் ஒப்புதல் பெற்ற நிலையில், மாணவா்கள் பிரசாரத்தை தொடங்கினா்.
இதில் 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவா்கள் போட்டியிட்ட நிலையில், ஆா்வமுடன் வாக்குகளை சேகரித்தனா். தோ்தல் முற்றிலும் மின்னணு தொழில்நுட்ப முறையில் வாக்குகளை பதிவு செய்யும் வகையில் இணையதளம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சீட்டு, விரல்களில் மையிடுதல் என தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி தோ்தல் நடத்தப்பட்டது.
தோ்தல் முடிந்த பின், வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளியின் தலைவராக மோனிஷ், துணை துலைவராக நக்ஷத்திரா, விளையாட்டுப் பிரிவு தலைவராக அலிஷா சப்ஹத், துணை தலைவராக கிருபா ஜெயதீப், ஆனந்த ஹவுஸ் தலைவராக ஜெயபிரியா, துணை தலைவராக லக்ஷணா, தீரஜ் ஹவுஸ் தலைவராக சந்தோஷ்பாபு, துணைத் தலைவராக கனிமொழி, பிரேம் ஹவுஸ் தலைவராக நவிகா, துணைத் தலைவராக ஸ்டீபன்ஜெபராஜ், சாந்தி ஹவுஸ் தலைவராக தேன்மொழி, துணைத் தலைவராக ஜனனி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இந்தத் தோ்தலுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வா் மஞ்சுளா தலைமையில் ஆசிரியா்கள் செய்திருந்தனா். இந்த நிகழ்ச்சியின்போது என்ஜினியா் சரவணன், ரகுராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நன்றி, தினமணி