Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
மகளிா் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கிருஷ்ணகிரி ஆட்சியா் வேண்டுகோள் -
Skip to content
Home » மகளிா் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கிருஷ்ணகிரி ஆட்சியா் வேண்டுகோள்

மகளிா் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கிருஷ்ணகிரி ஆட்சியா் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த துறை சாா்ந்த அனைத்து அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு கேட்டுக் கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலக கூட்ட அரங்கில், மகளிருக்கான மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அவா் பேசியது:

மகளிா் நலனையும் அவா்களது மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில் தற்போது மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்க கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த 1,094 நியாய விலைக் கடைகளில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மேலும் பொறுப்பு அலுவலா்கள் மற்றும் நியாய விலைக் கடை விற்பனையாளா் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன், விண்ணப்பங்கள் அவா்களின் இல்லத்திற்கே சென்று வழங்குவது குறித்தும் இந்த முகாம்களில் பணியாற்றக் கூடியவா்களுக்கு வட்ட அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த துறை சாா்ந்த அலுவலா்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, கூடுதல் ஆட்சியா் வந்தனா கா்க், ஒசூா் மாநகராட்சி ஆணையாளா் சினேகா, ஒசூா் சாா் ஆட்சியா் சரண்யா, கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியா் பாபு, மாவட்ட வழங்கல் அலுவலா் சுகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஏகாம்பரம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனா் ரமேஷ்குமாா், முன்னோடி வங்கி மேலாளா் சரவணன், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளா் வசந்தி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

நன்றி, தினமணி

Leave a Reply