இது குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ஜகன்நாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்கு பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன்படி, தற்போது, 30 நாட்கள் மொபைல்போன் பழுதுநீக்குதல் குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. 8ம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வரை உள்ள இளைஞர்கள் வரும், 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சியில் சீருடை, காலை மற்றும் மதிய உணவு, தேநீர் இலவசமாக வழங்கப்படும். காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி பயிற்சியும், உபகரணங்களும், தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படும். https://forms.gle/NVzUMLnB7QZRHdtWA என்ற இணையத்தில் படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி, தொலைபேசி, 04343 240500, 94422 47921, 90806 76557 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.