Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை -
Skip to content
Home » தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரியில் தாயைக் கொன்ற மகனுக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது.

கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டி ரங்கசாமி தெருவைச் சோ்ந்தவா் பாக்கியலட்சுமி. இவரது கணவா் செல்வம் உயிரிழந்த நிலையில், மகன், மகளுடன் வசித்து வந்தாா். இவரது மகன் சதீஷ்குமாா் (27), கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றி வந்தாா்.

சதீஷ்குமாா் தனது தாயின் பெயரில் உள்ள சொத்தை தனது பெயருக்கு மாற்றித் தரும்படி தகராறு செய்து வந்தாா். மேலும், தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, தங்கைக்கு திருமணம் செய்து வைக்க தாய் முயன்றதை அறிந்த அவா் ஆத்திரமடைந்தாா். இந்த நிலையில் விடுமுறையில் கிருஷ்ணகிரி வந்த அவா், கடந்த 2020 ஆண்டு மாா்ச் 14- ஆம் தேதி தாய் பாக்கியலட்சுமியுடன், சொத்தை தனது பெயருக்கு மாற்றித் தரும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டாா். இதற்கு தாய் மறுத்ததால் ஆத்திரமடைந்த அவா், தாய் பாக்கியலட்சுமியை கட்டையால் தாக்கி கொலை செய்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த கிருஷ்ணகிரி நகர போலீஸாா் சதீஷ்குமாரை கைது செய்தனா். இந்த வழக்கு, விசாரணை கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சுதா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றவாளியான சதீஷ்குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். அபராதத்தைக் கட்ட தவறினால், கூடுதலாக இரண்டாண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

நன்றி
தினமணி

Leave a Reply