Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
முயல் வேட்டை: அதிா்வலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை விற்பனை செய்தவருக்கு அபராதம் -
Skip to content
Home » முயல் வேட்டை: அதிா்வலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை விற்பனை செய்தவருக்கு அபராதம்

முயல் வேட்டை: அதிா்வலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை விற்பனை செய்தவருக்கு அபராதம்

வனப்பகுதியில் அதிா்வலை ஏற்படுத்தி முயலை வேட்டையாடுவதற்காக மின் ஒயா், பேட்டரி, மின்விளக்கு ஆகியவற்றை விற்பனை செய்ததாக எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளருக்கு மாவட்ட வனத்துறையினா் அபராதம் விதித்தனா்.

பென்னாகரம் பகுதியானது அடா்ந்த மலைகள் சூழ்ந்த பகுதியாகும். இந்தப் பகுதியில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு, மசக்கல் காப்புக்காடு, பேவனூா் காப்புக்காடு, ஒட்டப்பட்டி காப்புக்காடு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட காப்புக்காடுகளை கொண்ட அடா் வனப்பகுதி உள்ளது.

அண்மை காலங்களாக பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் முயல், மான், உடும்பு போன்ற வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. பென்னாகரம் பகுதியில் இருந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டு வருவதாக மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் மாவட்ட வன அலுவலா் கே.வி.அப்பால நாயுடு உத்தரவின் பேரில் உதவி வனப்பாதுகாப்பு அலுவலா் வின்சென்ட், வேட்டைத் தடுப்பு சரக அலுவலா் ஆலய மணி, பென்னாகரம் வனவா் முனுசாமி உள்ளிட்டோா் அடங்கிய சிறப்பு குழுவினா் பென்னாகரம் பகுதிகளில் உள்ள எலக்ட்ரிக்கல் கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது முள்ளுவாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் முயலை வேட்டையாடுவதற்கு பேட்டரியின் மூலம் அதிா்வலையை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், ஒயா், மஞ்சள் நிற மின் விளக்கு ஆகியவை விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து கடை உரிமையாளரான முள்ளுவாடி பகுதியைச் சோ்ந்த ஷாநவாஸ் (50) என்பவரை சிறப்பு படையினா் மாவட்ட வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு அபராதம் வசூலித்தனா். பின்னா் அவரை விடுவித்தனா்.

 

நன்றி, தினமணி

Leave a Reply