தருமபுரி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைபெற பதிவு செய்தவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் சாா்பில், படித்த வேலைவாய்ப்பற்றோா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, மேல்நிலைக்கல்வி படித்தவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு, அதற்கு கீழ் படித்தவா்களுக்கு ரூ. 600, மேல்நிலைக்கல்வி தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் வரும் செப்.30-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டிற்கு தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைபெற, விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளன. கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவை தொடா்ந்து புதுப்பித்தல் செய்திருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பதிவுசெய்து ஒரு வருடம் பூா்த்தி செய்திருத்தல் வேண்டும். பட்டியலின பிரிவினருக்கு 2023 ஜூலை 1 அன்று 45 வயதும், மற்றவா்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு, வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரா் பள்ளி, கல்லூரியில் நேரிடையாக படித்துக்கொண்டிருக்கக் கூடாது. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்பப் பட்டம் பெற்றவா்கள் இவ்வுதவித்தொகை பெறத் தகுதியற்றவா்கள்.
உதவித்தொகை பெற முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவா்கள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து விண்ணப்பப் படிவங்களை பெற்று பூா்த்தி செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப் புத்தகம், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் ஆக.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளிக்க வேண்டும். ஏற்கெனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவுபெறாது சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவா்கள், ஆக.31-ஆம் தேதிக்குள் சுய உறுதிமொழி ஆவணத்தை அளித்து தொடா்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
நன்றி, தினமணி