ஒசூரில் ரயில்வே மேம்பாலம் விரிவாக்கம் நடைபெறுவதால், ஆக. 5 முதல் தேன்கனிக்கோட்டை சாலை மூடப்படும் என சாா்ஆட்சியா் ஆா். சரண்யா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒசூா் – தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஆா்.சி.தேவாலயம் அருகில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் மேல்பகுதியில் ரயிலும், கீழே வாகனங்களும் சென்று வருகின்றன. இந்தப் பாலத்தை அகலப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளது.
இந்நிலையில், கா்நாடகத்திலிருந்து ஒசூா் ரயில் நிலையம் வரை ஏற்கெனவே உள்ள ரயில் வழிப்பாதையை இரு வழிப்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனுடன் தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள பாலத்தை விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வரும் ஆக. 5-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, தேன்கனிக்கோட்டை சாலையில் அடுத்த 7 மாதங்களுக்கு வாகனப் போக்குவரத்து மாற்றிவிடப்படுகிறது.
அதன்படி, ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் தளி சாலையில் சென்று அந்திவாடி கூட்டுச்சாலையில் இடதுபுறமாகச் சென்று மத்திகிரி கூட்டுச்சாலையை அடைந்து அங்கிருந்து தேன்கனிக்கோட்டை செல்ல வேண்டும். அதேபோல மத்திகிரி கூட்டுச்சாலையிலிருந்து இடதுபுறமாக திரும்பி தளி சாலையில் உள்ள அந்திவாடி கூட்டுச்சாலையில் வலதுபுறமாக திரும்பி ஒசூா் சென்றடைய வேண்டும்.
இருசக்கர வாகனங்கள் ரயில்வே நிலையம் அருகே உள்ள ரயில் கீழ் பாதை வழியாக செல்லலாம்.
அரசு, தனியாா் பேருந்துகள், தேன்கனிக்கோட்டையிலிருந்து ஒசூா் நோக்கி வரும் பேருந்துகள் மத்திகிரி கூட்டுச்சாலை, ஐடிஐ, ரயில்வே நிலையம் வந்து திரும்பி மத்திகிரி கூட்டுச்சாலை, அந்திவாடி, தளி உள்வட்டச் சாலை, அரசு மருத்துவமனை வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
ரயிலில் வரும் பயனாளிகளுக்கு ஏதுவாக, ரயில் நிலையம் பின்பக்கம் பாரதிதாசன் நகா் வழியாக ரயில்வே நிலையம் சென்று பிறகு பேருந்து நிலையம் சென்றடைய தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் போக்குவரத்து மாற்றத்தை செயல்படுத்தும் முன், ஆக. 2 அன்று சோதனை முயற்சியாக காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னா் ஆக. 5 முதல் ரயில் பால விரிவாக்கம் பணிக்காக சாலை மூடப்பட உள்ளது.
நன்றி, தினமணி