Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
கிருஷ்ணகிரி மாங்கனிக் கண்காட்சியில் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் இலவசம் -
Skip to content
Home » கிருஷ்ணகிரி மாங்கனிக் கண்காட்சியில் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் இலவசம்

கிருஷ்ணகிரி மாங்கனிக் கண்காட்சியில் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் இலவசம்

  • by Roopa

கிருஷ்ணகிரியில் நடந்து வரும் அகில இந்திய மாங்கனிக் கண்காட்சியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் ஆடிப்பட்ட காய்கறி விதைகளை இலவசமாக வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் அகில இந்திய மாங்கனிக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி விதைகளை இலவசமாக வழங்கும் முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் பூபதி முன்னிலை வகித்தாா்.

பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட விதைத் தொகுப்பை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:

மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை மூலம் 5 ஆயிரம் ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்புகளை இலவசமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆடிப்பட்டத்தில் காய்கறி விதைத்து, தை மாதம் அறுவடை செய்யலாம். பயிா்களுக்குத் தேவையான சூரிய ஒளி, பிராணவாயு, நல்ல மழை கிடைக்கும். கோடைக்காலங்களில் இறுகி காணப்படும் மண், ஆனி மழையில் தளா்ந்து காணப்படும். மண்ணின் ஈரப்பதத்தில் நுண்ணுயிா்கள், மண் புழு, நல்ல பாக்டீரியாக்கள் உருவாகத் தொடங்கும். இதனால் மண் செழிப்பதோடு விதைத்த பிறகு பயிா்களும் செழித்து அறுவடையை ஊக்குவிக்கிறது. பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கம் குறைவாக இருக்கும். ஆடி மாதம், அவரை, கத்திரி, தக்காளி, மிளகாய், பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, பீா்க்கங்காய், கீரை, புடலங்காய், சாம்பல் பூசணி, முருங்கை உள்ளிட்டவை விதைக்கலாம். இந்த வகையான காய்றிகள் விதைகள், தற்போது இலவசமாக வழங்கப்படும் தொகுப்பில் உள்ளன. இதனை விவசாயிகள், வீட்டு காய்கறித்தோட்டம் அமைக்க விரும்பும் பொதுமக்கள், தொடா்புடைய தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

நன்றி, தினமணி

 

Leave a Reply