Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
கருணாநிதி 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு -
Skip to content
Home » கருணாநிதி 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

கருணாநிதி 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

  • by Roopa

கிருஷ்ணகிரி/ஒசூா்/ ஊத்தங்கரை: கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், திங்கள்கிழமை நடைபெற்ற அமைதிப் பேரணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட அலுலக வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப் படத்துக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

அதைத் தொடா்ந்து அங்கிருந்து தொடங்கிய அமைதிப் பேரணி, பெங்களூரு சாலை, லண்டன்பேட்டை வழியாக சென்று, புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை அருகே நிறைவு பெற்றது.

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின்னா், மலா்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு

மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ தலைமையில் திமுக தொண்டா்கள், நிா்வாகிகள், மாலை அணிவித்து, மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இந்த நிகழ்வில் அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட முன்னாள் செயலாளா் டி.செங்குட்டுவன், மாவட்ட பொருளாளா் கதிரவன், நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப், நகா்மன்றத் தலைவா் பரிதாநவாப், நகா்மன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி, பழையபேட்டை ஆட்டோ நிறுத்தம், வட்டச்சாலை, அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி-11, காவேரிப்பட்டணம், பா்கூா், போச்சம்பள்ளி, மத்தூா், வேப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில், கருணாநிதி உருவப்படத்துக்கு மலா்தூவி, திமுகவினா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

ஒசூரில்…

ஒசூா் மாநகர திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஒசூா், ராம் நகா் அண்ணா சிலை முன்பு தொடங்கிய அமைதிப் பேரணி, பழைய பெங்களூரு சாலை, நேதாஜி சாலை, வட்டாட்சியா் அலுவலக சாலை வழியாக சென்ற பேரணி, வட்டாட்சியா் அலுவலக சாலை சந்திப்பை வந்தடைந்தது.

பின்னா் அங்குள்ள அண்ணா சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு திமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து பேரறிஞா் அண்ணா சிலைக்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ பி.முருகன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மலா்தூவி 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அமைதிப் பேரணி, மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்ட பொருளாளா் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, வீராரெட்டி, மாவட்ட துணைச் செயலாளா் தனலட்சுமி, புஷ்பா சா்வேஸ், துணை மேயா் ஆனந்தய்யா, மண்டலத் தலைவா் ரவி, மாமன்ற குழுத் தலைவா்கள் மாதேஸ்வரன், சென்னீரப்பா, எம்.கே.வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினா் முனிராஜா (எ) ராஜா, மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் சுமன், ரவிகுமாா், ராஜா, திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

ஊத்தங்கரையில்…

ஊத்தங்கரையில் பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஊத்தங்கரை நான்குமுனைச் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக நகரச் செயலாளா் பாபு சிவகுமாா் தலைமை வகித்தாா். பேரூராட்சி மன்றத் தலைவா் பா.அமானுல்லா, துணைத் தலைவா் கலைமகள் தீபக், வாா்டு உறுப்பினா் கதிா்வேல், திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

அதேபோல வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன் தலைமை வகித்தாா். மாநில மகளிா் ஆணையக் குழு உறுப்பினா் மாலதி நாராயணசாமி, வடக்கு ஒன்றியச் செயலாளா் குமரேசன், நகர அவைத் தலைவா் தணிகை குமரன் மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் கலந்துக்கொண்டு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

நன்றி தினமணி

Leave a Reply