Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
சாலையோர ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 25 கடைகள் அகற்றம் -
Skip to content
Home » சாலையோர ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 25 கடைகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 25 கடைகள் அகற்றம்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே போக்குவரத்து இடையுறாக
சாலையோர ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 25 கடைகளை நேற்று போலீஸார் பாதுகாப்பு
வருவாய்த்துறையினர் அகற்றினர்.

கிருஷ்ணகிரி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்
கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள்
சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையை ஓட்டி அமைந்துள்ளதால்,
மருத்துவமனை அமைந்துள்ளதால், நோயாளிககள் உட்பட அனைத்து தரப்பினரும், ஆபத்தான
முறையில் சாலையை கடந்து சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதற்காக ரூ.26 கோடி
மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவனையை ஓட்டியும், எதிரேயும் தேநீர் கடை, சிற்றுண்டி
உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கடைகள், தேசிய நெடுஞ்சாலையோரம் போக்குவரத்திற்கு
இடையுறாக வைத்துள்ளனர். தற்போது, மேம்பாலம் பணிகள் மேற்கொள்ள உள்ளதால்,
போக்குவரத்து இடையுறு ஏற்படும் என்பதாலும், கடைகளை அகற்றிட தேசிய
நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கினர்.
கடைகள் அகற்றப்படாததால் நேற்று காலை தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்
ரமேஷ்பாபு, கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சம்பத், குருபரப்பள்ளி போலீஸ்
இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸார் பொக்லைன் வாகன உதவியுடன், ஆக்கிரமிப்பு
கடைகளை அகற்றினர். தேசிய நெடுஞ்சாலையோரம் போக்குவரத்திற்கு இடையுறாக,
ஆக்கிரமித்து கடைகள், தள்ளுவண்டிகள் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என
அலுவலர்கள் தெரிவித்தனர்

Leave a Reply