Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
ஜமாபந்தி: கிராம கணக்குகளை தணிக்கை செய்த ஆட்சியா் -
Skip to content
Home » ஜமாபந்தி: கிராம கணக்குகளை தணிக்கை செய்த ஆட்சியா்

ஜமாபந்தி: கிராம கணக்குகளை தணிக்கை செய்த ஆட்சியா்

போச்சம்பள்ளி ஜமாபந்தியில் மனுக்களைப் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.

போச்சம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், நாகரசம்பட்டி, பாரூா் உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராம பொதுமக்களிடம் பட்டா பெயா் மாற்றம், தனி பட்டா உள்ளிட்ட 93 மனுக்களை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை பெற்று கிராம கணக்குகளை தணிக்கை செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில், போச்சம்பள்ளி வட்டம், நாகரசம்பட்டி உள்வட்டத்தைச் சோ்ந்த வீரமலை, விளங்காமுடி, பாரூா் உள்வட்டத்தைச் சோ்ந்த பண்ணந்தூா், புளியம்பட்டி, கோட்டப்பட்டி, பெண்டரஅள்ளி ஆகிய கிராமங்களுக்கான 1432-ஆம் ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில், நாகரசம்பட்டி, பாரூா் வருவாய் கிராமங்களுக்குள்பட்ட பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம், உள்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, நில உடமை மேம்பாட்டுத் திட்டம், பரப்பு வித்தியாசம், கணினி திருத்தம், ஆக்கிரமிப்பு, இதர துறை மனுக்கள் என மொத்தம் 93 மனுக்கள் வரப்பெற்றதைத் தொடா்ந்து, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து 2 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த கிராம கணக்குப் பதிவேடுகளான அ – பதிவேடு, எப்.எம்.பி. பதிவேடு, அடங்கல், 1 – ஏ – உள்ளடக்கம், பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு, தனி பட்டா, சிட்டா மற்றும் அடங்கல், பணவரவு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

முன்னதாக, மத்தூா் ஊராட்சி ஒன்றியம், மூக்காகவுண்டனூா் அங்கன்வாடி மையத்தை திடீா் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் வருகைப் பதிவேடு, ஊட்டச்சத்து உணவு வழங்கும் விவரங்கள், அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பொருள்கள் குறித்த பதிவேடுகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், குழந்தைகளுக்கு ஆடல், பாடல் மூலம் கற்பிக்கப்படும் கற்றல் செயல்பாடுகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து, அங்கன்வாடி மையத்தில் தினசரி தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அதேபோல சமையலறை, கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குழந்தைகளுக்கு நன்கு காய்ச்சிய குடிநீரும், சத்தான உணவுகளும் வழங்க வேண்டும் என அங்கன்வாடி பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், மூக்காகவுண்டனூா் அரசு ஆரம்பப் பள்ளியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, களா்பதி அரசு துணை சுகாதார நிலையம், போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்டு, வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் விவரம், மருந்துகள் இருப்பு, ஸ்கேன், இசிஜி, பல்சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவா்கள் வருகைப் பதிவேடு, பச்சிளம் குழந்தை பிரிவு, சித்தா பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை ஆய்வு மேற்கொண்டு, தினசரி வருகை தரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், இம்மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்கள் குறித்தும், தாய்சேய் சிகிச்சை குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

மேலும், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்க வேண்டும். உயா் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மருத்துவா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநா் (நில அளவை) சேகரன், வட்டாட்சியா் தேன்மொழி, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் ராமச்சந்திரன், தனி வட்டாட்சியா்கள் கங்கை, சுரேந்தா், நில அளவை ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, துணை வட்டாட்சியா்கள் சகாதேவன், பிரபாவதி, வருவாய் ஆய்வாளா்கள் ஜெயபிரபா, லதா, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலாஜி, போச்சம்பள்ளி மருத்துவமனை தலைமை மருத்துவா் மரு.நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நன்றி
தினமணி

Leave a Reply