Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
ஊத்தங்கரை அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணியைத் தொடங்கக் கோரி உண்ணாவிரதம் -
Skip to content
Home » ஊத்தங்கரை அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணியைத் தொடங்கக் கோரி உண்ணாவிரதம்

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணியைத் தொடங்கக் கோரி உண்ணாவிரதம்

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டவா்கள்.

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள காலம் தாழ்த்தி வரும், அரசு அதிகாரிகளைக் கண்டித்து, அரசு மருத்துவமனை முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை கிருஷ்ணகிரி, திண்டிவனம், சேலம் – வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் இணைப்பு சாலையில் அமைந்துள்ளது. ஊத்தங்கரை தொகுதியில் போதுமான மருத்துவமனைகள் இல்லாததால், விபத்து, மகப்பேறு, எலும்பு முறிவு , அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு சுமாா் 50 கி.மீ. தொலைவில் உள்ள கிருஷ்ணகிரி அல்லது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தான் செல்ல வேண்டும்.

இந்நிலையில் ஊத்தங்கரை மக்களின் நலன்கருதி, மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 15 ஆவது நிதி குழு ஒப்புதலோடு, ரூ. 23.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனாலும் புதிய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணியைத் தொடங்காமல் மாவட்ட நிா்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.

மேலும் அரசு மருத்துவமனை கட்டுவதற்காக ஊத்தங்கரை ஸ்ரீ வித்தியா மந்திா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் சந்திரசேகரன், ஊத்தங்கரை அருகே திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் தனக்குச் சொந்தமான 4.38 ஏக்கா் நிலத்தை மருத்துவத் துறைக்கு தானமாக வழங்கினாா். கடந்த ஓராண்டுக்கு முன்னா் பத்திரப்பதிவு செய்து கொடுத்தும் புதிய அரசு மருத்துவமனை விரிவாக்கக் கட்டடம் கட்டாமல் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து, ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஒன்று சோ்ந்து, ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காட்டேரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சேகா், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜெயலட்சுமி, எம்ஜிஆா் நூற்றாண்டு அறக்கட்டளைத் தலைவா் மருத்துவா் இளையராஜா, விசிக நிா்வாகிகள் அசோகன், குபேந்திரன், இந்திய குடியரசு கட்சி (கவாய்) மாநிலச் செயலாளா் சிவா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலாளா் மகாலிங்கம், ஹோட்டல் சங்கத் தலைவா் ஆா்.கே. ராஜா, திராவிட கட்சி நிா்வாகி பழ.பிரபு, காட்டேரி ஊராட்சி மன்றத் தலைவா் விஜயகுமாா், ஆடிட்டா் லோகநாதன், ஊத்தங்கரை சுற்றியுள்ள கிராமப் பொதுமக்கள் உள்பட 700 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை வட்டாட்சியா் திருமலைராஜன் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கையை நிறைவேற்ற பரிந்துரை செய்வதாகக் கூறி, உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தாா்.

நன்றி
தினமணி

Leave a Reply