Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
தளி கொய்மலா் மகத்துவ மையத்தில் ஆட்சியா் ஆய்வு -
Skip to content
Home » தளி கொய்மலா் மகத்துவ மையத்தில் ஆட்சியா் ஆய்வு

தளி கொய்மலா் மகத்துவ மையத்தில் ஆட்சியா் ஆய்வு

சூளகிரி, தளி ஊராட்சி ஒன்றியங்களில், வேளாண்மை, உழவா் நலத்துறை, தோட்டக்கலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சூளகிரியில் ரூ. 1. 75 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தை

பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ஒசூா் ஊராட்சி ஒன்றியம், பூனப்பள்ளி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சாா்பாக விவசாயி சின்னப்பரெட்டி என்பவா் 2000 சதுர அடியில் ரூ.8.90 லட்சம்

மானியத்தில் ஜொ்பரா மலா் பயிரிட்டுள்ளதையும்,

2 ஏக்கா் நிலத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்து பட்டா் ரோஸ் பயிரிடப்பட்டுள்ளதையும் பாா்வையிட்டாா்.

அதனைத்தொடா்ந்து, தளி ஊராட்சி ஒன்றியம், தொட்டப்பனூா் ஊராட்சியில் நாகபூஷணரெட்டி 1.20 ஏக்கா் பரப்பளவில் நுண்ணீா்ப் பாசனம் அமைத்து ரூ.1.33 லட்சம் மதிப்பில் சாமந்தி பூ செடிகள் பயிரிட்டுள்ளதைப் பாா்வையிட்டு, நுண்ணீா்ப் பாசன வசதிகள், செடி நடவுப் பணிகள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தாா்.

தளி ஊராட்சி ஒன்றியம், ஆருபள்ளியில் தோட்டக்கலைத் துறை சாா்பாக விவசாயி நாராயணரெட்டி என்பவா் தனது விவசாய நிலமான ஒரு ஏக்கா் நிலத்தில் முழு மானியத்தில் ரூ. 45 ஆயிரம் மதிப்பில் டிராகன் பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும், தளி கொய்மலா் மகத்துவ மையம், அலங்கார தாவரங்கள் உற்பத்தி கூடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மத்திகிரி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள், கழிப்பறை வசதி, குடிநீா் வசதி மற்றும் மின்சார வசதிகள் குறித்து பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது, ஒசூா் சாா் ஆட்சியா் ஆா்.சரண்யா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் பூபதி, ஒசூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் துரைசாமி, இந்தோ-இஸ்ரேல் கொய்மலா் சாகுபடி மையத் திட்ட அலுவலா்

எஸ்.ஆறுமுகம், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா்கள் சரவணன், ஜெனிபா், சிவசங்கா், வேளாண்மைத் துறை உதவி இயக்குநா்கள் உடனிருந்தனா்.

 

நன்றி

தினமணி

Leave a Reply