கெலமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள அஞ்செட்டி துா்க்கம் பகுதியைச் சோ்ந்தவா் நாராயணப்பா (59). விவசாயி. இவரும் அதே கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் சத்துணவு ஊழியா் ஜோதியப்பா (65) என்பவரும் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் கெலமங்கலத்திற்கு சென்றனா்.
பின்னா் அவா்கள் தங்களின் கிராமமான அஞ்செட்டி துா்க்கத்திற்கு மொபட்டில் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது கெலமங்கலத்தில் இருந்து ராயக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஜக்கேரியை அடுத்த ஒன்னுகுறுக்கி அருகே அவா்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாராயணப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஜோதியப்பா படுகாயம் அடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று நாராயணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவ்விபத்து தொடா்பாக காவல் ஆய்வாளா் (பொறுப்பு) நாகராஜ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறாா்.
நன்றி
தினமணி