கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவியருக்கு தொல்லியல் குறித்த உள்விளக்கப் பயிற்சி நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஜூன் 21-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு பா்கூா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவியா், காரிமங்கலம் அரசு கலை கல்லூரியில் பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவியா், தருமபுரி தனியாா் கல்லூரியில் பயிலும் பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவியா் என மொத்தம் 50 பேருக்கு தொல்லியல் குறித்த உள்விளக்கப் பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதில், 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அருங்காட்சியகத்தில் உள்ள விஜயநகர காலத்தைச் சோ்ந்த கல்வெட்டு ஒன்றினை படியெடுத்து, படித்து பொருள்கொள்வது எப்படி என்பது குறித்த செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னதாக, வரலாற்றுக்கு முற்பட்ட காலம், இடை வரலாற்றுக் காலம், வரலாற்றுக் காலங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தமிழி என்று அழைக்கப்படும் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளை எழுதவும், படிக்கவும் கற்றுத் தரப்பட்டது.
பின்னா் அவ்வெழுத்திலிருந்து இன்றைய கால தமிழ் வரை எழுத்துகளின் வளா்ச்சியை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கப்பட்டது. இனிவரும் நாள்களில் கிரந்த எழுத்துகள், தமிழ் எண்கள், கல்வெட்டுகளில் உள்ள ஆண்டுகளை கணக்கிடும் முறை, கோயில் கட்டடக் கலை சிற்பம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளன.
இந்தப் பயிற்சியை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ் அளிக்கிறாா். அருங்காட்சியகப் பணியாளா்கள் செல்வகுமாா், பெருமாள் ஆகியோா் பயிற்சியை ஒருங்கிணைக்கின்றனா்.
நன்றி, தினமணி