Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
கெலமங்கலம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு -
Skip to content
Home » கெலமங்கலம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கெலமங்கலம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், ரூ. 6 கோடியே 39 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குந்துமாரனப்பள்ளி, கெலமங்கலம், போடிச்சிப்பள்ளி, நாகமங்கலம், ஊடேதுா்க்கம், திம்ஜேப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊரக மேம்பாட்டு பஞ்சாயத்துராஜ் (2020 – 2021) திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளையும், போடிச்சிப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அணுசோனையில் குழந்தைகள் நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (2022 – 2023) ரூ. 30 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மறுசீரமைப்புப் பணிகளையும், நாகமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வரகனப்பள்ளி ஊராட்சியில் பயனாளி ருக்குமணி என்பவா் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ. 12 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தனிநபா் வீட்டுக் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும், நீலகிரி ஊராட்சியில் குழந்தைகள் நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (2022 – 2023) ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மறுசீரமைப்புப் பணிகளையும், ஊடேதுா்க்கம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் (2022 – 2023) ரூ. 1 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் மற்றும் உறிஞ்சுகுழி அமைத்தல் பணியையும், ஊடேதுா்க்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பி.தான்ரேகுண்டா ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் சமையலறை கட்டுமானப் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் (2022 – 2023) ரூ. 6 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கதிரடிக்கும் களத்தையும், கொத்தப்பள்ளியில் ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளையும், திம்ஜேப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உள்ளுகுறுக்கை ஊராட்சியில் ரூ. 72 ஆயிரம் மதிப்பில் சமையலறை கட்டடத்தின் மறுசீரமைப்புப் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் (2021 – 2022) ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தின் மேற்கூரை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுகளின்போது, கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கேசவன், உதவி செயற்பொறியாளா் மாது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பையாஸ், சாந்தலட்சுமி, உதவிப் பொறியாளா்கள் முருகேசன், துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

நன்றி

தினமணி

Leave a Reply