சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை திங்கள்கிழமை விதித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள செலசனாம்பட்டியைச் சோ்ந்தவா் பிரபு (29). இவா், 15 வயது சிறுமியை ஆசைவாா்த்தை கூறி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் போலீஸாா் கடந்த 2021 செப். 21-இல் வழக்குப் பதிந்து, போக்சோ சட்டத்தில் பிரபுவை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுதா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றவாளி பிரபுவுக்கு சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறை, ரூ. 1,000 அபராதம், போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இந்த தண்டனையை அவா் எக்காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.
நன்றி, தினமணி